எந்தன் வரிகளின் வர்ணனையே!❣
.உனக்கான இறுதி துதியை எழுதுகிறேன்...☹
.
முடிந்தால் முதலும் முடிவுமாய் இதை உன் விழிகளில் எடுத்துக் கொள்!😶
.
காலங்கள் கடக்கையிலும் உன்னை எந்தன் கண்ணகியாக என் கண்ணுக்குள் மூடி வைத்தேனே!😒
.
கண்ணகி என்றதற்காக என்னில் தீ மூட்டி என்னையே எரித்தாயே!😕
.
கானல் நீர் கொண்டு என் காதலை அணைத்தாயே!💙
.
அணைக்க நினைத்து கண்ணீரை அளித்துச் சென்றாயே!😭
.
போதும்...
இத்தனை காலமும் சொல்லாத காதலை சொல்லோடு சொல்லிய இந்த ஒருதலைக்காதல் போதும்...🖤
.
மௌனம் அதை கலைத்து எந்தன் காதலை கூறிடும் கனா நான் இன்னும் காணவில்லை...💔
.
கண்டதும் உன் கண் பார்த்து கவி பாடுகிறேன் அந்த நாளிற்காக காத்திருக்கிறேன்...😀
.
கார்மேகக்கூந்தல்!💨
கண்டவரை ஈர்த்திடும் கண்கள்!👁 அதனை மெருகூட்டும் கண்ணாடி!👓
இதில் தடுமாறி விழுந்தவனை நிலைகுலைய செய்யப்பட்ட கன்னக்குழி!😊
.
வரிசையில் வருகின்றன வர்ணனைகள்!🥰
.
இருந்தும் வலிகள் தந்த இந்த வாழ்வின் வர்ணனைகள் இனி வேண்டாம்...😓
.
எதற்கு இந்த நடைபிணவாழ்க்கை?😟
.
நடந்தவை நடந்ததாக இருக்கட்டும்...😞
இனி நிகழ்பவை நான் நினைத்தவையாக அமையட்டும்...😔
என் எதிர்காலம் தனியாக செல்லட்டும்...😟
.
என்றும் எந்தன் வெண்ணிலவு நீ மட்டும் தான்!🌝
இருந்தும் எந்தன் இரவுகள் அமாவாசை ஆகட்டும்...🌚 .
No comments:
Post a Comment