கனவைத் தொலைத்தேன்....

கடல் சூழ்ந்த தீவில்

ஒரு தேவதை இருக்கிறாள்

முழுநிலவின் முகம் அவள்

ஆல மரத்தின் விழுதாக

கண்ணின்  இமைகள் 

பட்டாம்பூச்சி மேனிகள் 

செம்பருத்தியில் ஆடை

இலைகள் கொட்டும் மரம்

அதன் குகையிலே

காத்திருக்கிறாள் என் காதலி
.
.

ஆனந்தமாய் விழித்துப் பார்த்தேன் 

கனவைத் தொலைத்தேன்.... 😌💔

No comments:

Post a Comment