நீ மறந்து போன நியாபகமாய் உனக்குள்ளே!!!

உனக்கும் எனக்குமான காதலை 

யார் யாரோ தெரிந்துருக்க,

உன்னால் மட்டும் 

உணரமுடியாமல் போனது; 

வாழ்வில் நான் வாங்கி 

வந்த சாபமா என்று தெரியவில்லை 

நீ என்னை மறந்தாலும் 

நீயும் நானும் பழகிய நாட்களை 

என்னால் என்றும் மறக்க முடியாது!!!

வாழ்ந்திருந்த நினைவோடும் 

வாழாமல் போன கனவோடும் 

உனக்காக காத்திருப்பேன்; 

நீ மறந்து போன 

நியாபகமாய் 

உனக்குள்ளே!!!  

No comments:

Post a Comment