உனக்கும் எனக்குமான காதலை
யார் யாரோ தெரிந்துருக்க,
உன்னால் மட்டும்
உணரமுடியாமல் போனது;
வாழ்வில் நான் வாங்கி
வந்த சாபமா என்று தெரியவில்லை
நீ என்னை மறந்தாலும்
நீயும் நானும் பழகிய நாட்களை
என்னால் என்றும் மறக்க முடியாது!!!
வாழ்ந்திருந்த நினைவோடும்
வாழாமல் போன கனவோடும்
உனக்காக காத்திருப்பேன்;
நீ மறந்து போன
நியாபகமாய்
உனக்குள்ளே!!!
No comments:
Post a Comment