முதல் காதல்.......

 வருடங்கள் பல சென்றாலும்

வாழ்க்கையில் சிலர் வந்தாலும்

முதல் காதலும் அதன் நினைவுகளும்

என்றும் மாறாது மறக்காது..❤️🥀😢

நீ மறந்து போன நியாபகமாய் உனக்குள்ளே!!!

உனக்கும் எனக்குமான காதலை 

யார் யாரோ தெரிந்துருக்க,

உன்னால் மட்டும் 

உணரமுடியாமல் போனது; 

வாழ்வில் நான் வாங்கி 

வந்த சாபமா என்று தெரியவில்லை 

நீ என்னை மறந்தாலும் 

நீயும் நானும் பழகிய நாட்களை 

என்னால் என்றும் மறக்க முடியாது!!!

வாழ்ந்திருந்த நினைவோடும் 

வாழாமல் போன கனவோடும் 

உனக்காக காத்திருப்பேன்; 

நீ மறந்து போன 

நியாபகமாய் 

உனக்குள்ளே!!!  

நான் சொல்லாமலே என் காதலை புரிந்து கொண்ட நீ...

நான் சொல்லாமலே 

என் காதலை

புரிந்து கொண்ட 

நீ...

இன்று யாரோ 

போல் 

செல்றின்றாய் 💔🥀🥺

அவளுக்கு என்று எழுதிய பக்கங்கள் பல..!! ஒரு சில;

அவளுக்கு என்று எழுதிய பக்கங்கள் பல..!!
ஒரு சில; 

கரையை சேரும் முன்னமே மறையும் அலை போல 
அவள் கை சேரும் முன்னமே அழிந்து விட்டது 

இன்னும் சில;

என்றாவது ஒரு நாள்!!!
அவள் வறுவாள் என்று மாறாத பூக்களாய் 
வண்ணங்களுடன் வாசனை வீசுகின்றன...!!!

நிஜங்கள் தந்த சுகம்

 நிஜங்கள் தந்த சுகம் 

நீ அருகில்

இல்லாதபோது 

நினைவுகள் 

தரவில்லையே

நிஜத்தில் 

என் கைகோர்த்து 

சிரித்து பழகி விட்டு 

நினைவுகளை தந்து 

தனியே தவிக்க விட்டு 

சென்றது 

ஏனோ...

😢😌💔

நாம் நேசித்த ஒருவர்

 நாம் நேசித்த ஒருவர் 

நம்மை விட்டு விலகி 

போவதை கூட 

தங்கி கொள்ளலாம் 

ஆனால் 

அவர்களது காதல்; 

பொய் என்று 

தெரிய வரும்போது 

உயிருடன் 

சாவது போல் 

இருக்கின்றது 

உன்னொடு வாழ்ந்த சந்தோசமான நாட்கள்

உன்னொடு வாழ்ந்த

சந்தோசமான நாட்கள்

மீண்டும் கிடைக்காது

என்று தெரிந்தும்...

மனதில் ஒரு ஏக்கம்

முன்பு போல் எல்லாமே

மாறிவிட கூடாதா என்று...💔

நாம் எதை அதிகம்

 நாம் எதை அதிகம் 

விரும்புகிறோமோ

அதையே நம்மிடம் 

இருந்து பாதியில்

பறித்து அழகு 

பார்க்கிறது 

காலம்...💔🥀

என் வாழ்க்கையில்....

 என் வாழ்க்கையில் 

வெளிச்சத்தை தந்த 

நீயே

இன்று 

என் வாழ்க்கை 

முழுக்க இருளாக்கி 

என்னை 

தனியே 

தவிக்க விட்டு

சென்றுவிட்டாய்...😌❤️🥀

தொலைந்தும் போகாமல் தொல்லைதரவும் மனமில்லாமல்...!!!

தொலைந்தும் போகாமல் தொல்லைதரவும் 

மனமில்லாமல்...!!!

நீ தேடும் போது தென்படும் தூரத்தில் தான் 

நான் இருக்கின்றேன்...!!!

நீ என்னை விட்டு எவ்வளவு தூரம் 

விலகி சென்றாலும் 

உனக்கும் எனக்குமான காதல் உன்னை 

என்னிடம் கொண்டு சேர்த்து விடும் 

சிறு சிறு சண்டைகளால் சில உறவுகள் பிரிகின்றன...!!!

சிறு சிறு சண்டைகளால் சில உறவுகள்

பிரிகின்றன...!!!

அர்த்தமே இல்லாத கோபம் ஆத்மார்த்தமான

அன்பை ஒரு கணப்பொழுதில் உதறி தள்ளிடுகின்றது..!!!

ஆனாலும் கோபம் தற்காலிகமாக வென்றாலும்

அன்பு என்பது அழகானது நிலையான வெற்றிக்காக 

காத்திருக்கும் இறுதியில் வென்றும் விடும்...!!!❤️🥀

உன்னை அணு அணுவாய்

உன்னை அணு அணுவாய் 

ரசித்து காதல் செய்கிறேனடி

ஆனால்;அதை!!!

உன்னிடம் புரிய வைக்கும் 

மொழி தான் எனக்கு 

தெரியவில்லை...!!!

உனது உலகிற்கும் 

எனது உலகுக்குமான 

பாஷை எதுவோ..!!!

World Tourism Day

 

🤗Thanks to everyone sharing their #WorldTourismDay Picture & Video 📸!

World Tourism Day 2021

 


टूटे ख्वाबों को

 टूटे ख्वाबों को

फिर सजाना आता है,

रूठे दिल को मनाना

आता है,

आप हमारे घाम को

देख कर परेशान ना हो

हमे तो दर्द में भी

मुस्कुराना आता है.

Toote Khawaabon Ko....

Toote Khawaabon Ko

Phir Sajana Aata Hai,

Ruthe Dil Ko Manana

Aata Hai,

Aap Hamare Ghum Ko

Dekh Kar Pareshan Na Ho

Hume Toh DARD Me Bhi

MUSKURANA Aata Hai.

மறைந்து போகும் நேரம்....

மறைந்து போகும் நேரம்

தெரிந்துகொள்ள ஆசையில்லை,

கடந்து போகும் காலம்

எவ்வளவென்பது தேவையில்லை,

தோள்கள் சாயும் இந்நொடி,

ஆயுள்முழுதும் போதுமடி

இதயத்தால் உணர்ந்திடும் காதலினை,

இதயத்தால் உணர்ந்திடும் காதலினை, 

இதழ்கள் மறைக்க ஆசைப்பட்டாலும், 

இமைகள் எப்போதும் 

அதை அவர்களுக்கு 

வெளிப்படையாக்கிவிடும்  

Kabhi Koi Apna

 Kabhi Koi Apna

Anjaan Ho Jaata Hai,


Kabhi Kisi Anjaan Se

Pyaar Ho Jaata Hai,


Yeh Zaroori Nahi KI Jo

Khushi De Usi Se Pyaar Ho,


Dil Todne Walo Se Bhi

Pyaar Ho Jaata Hai...

நான் வெறும் காகிதம் அல்ல

நான் வெறும் காகிதம் அல்ல

உன்னை என்னுள் நிரப்பி கொண்ட 

கவிதை நான்....!!!

மரத்தில் இருக்கும் போது.....

மரத்தில் இருக்கும் போது 

இலையும் காற்றும் நேசிக்கிறது 

விழுந்து மக்கிப் போகும் வரைையில் 
அந்த காற்றுடன் கைகோர்த்துப்  
பறந்து செல்கிறது இலை 

மீண்டும் சொல்கிறேன் :
நான் இலை
அவள் காற்று

அவ்வளவுதான் எங்க காதல்.

நினைவுகள் நீந்திக்

நினைவுகள் நீந்திக் 

கொள்கிறது 

கண்ணீர் 

என்ற 

அருவியில்

கனவைத் தொலைத்தேன்....

கடல் சூழ்ந்த தீவில்

ஒரு தேவதை இருக்கிறாள்

முழுநிலவின் முகம் அவள்

ஆல மரத்தின் விழுதாக

கண்ணின்  இமைகள் 

பட்டாம்பூச்சி மேனிகள் 

செம்பருத்தியில் ஆடை

இலைகள் கொட்டும் மரம்

அதன் குகையிலே

காத்திருக்கிறாள் என் காதலி
.
.

ஆனந்தமாய் விழித்துப் பார்த்தேன் 

கனவைத் தொலைத்தேன்.... 😌💔

அவளை மறந்துவிட்டேன்....

அவளை மறந்துவிட்டேன்

எனச் சொல்லி விட்டு

வரும் வழி எல்லாம்

யார் யாரோ உருவத்தில்

அவளை

பார்த்து கொண்டே

வருகிறேன்...!!!

நான் தனிமையில் இல்லை என்பதை........

நான் தனிமையில் இல்லை என்பதை 

உன் நினைவுகள் வந்து 

முகத்தில் ஆரைந்து சொல்கிறது 

தனிமையில் நீ இல்லவே இல்லை 

நினைவில் நான் இருக்கிறேன் என்று 

வாழ்நாள் முழுவதும்...

வாழ்நாள் முழுவதும் 
பல கூடுகளில் 
வாழ சுதந்திரமாக
பறந்து கொண்டு இருந்த 
பறவை நான்
இன்று பல இதய கூண்டுகள் 
திறந்த விடுதி போல் ஒரு நாள் 
என்னை அழைக்கிறது
நான் உள்ளே சென்று 
என்னிடம் இருக்கும் சத்தமில்லாத 
என் புன்னகை வடிவங்களை 
அள்ளி கொடுத்து விட்டு 
உடனே பறந்துவிட்டேன் 
ஒரு பறவையாக சுதந்திரமாக

புறம் தள்ளி நீ போக......

 புறம் தள்ளி நீ போக

புது உலகம் தந்தாயே

புதிரான வாழ்வில்

கேள்வி குறியாய் ஆனேன்

மௌனத்தின் உச்சியில் நின்றேன்

தனிமையின் சுவரில் ஒட்டிய இருள் ஆனேன்

கிறுக்கி கசக்கி எரிந்த

பிழையான கவிதையானேன்

பூக்கள் இல்லாத செடியில்

காய்ந்து விழுந்த இலையானேன்

உரமாகும் முன் எரிந்த சாம்பலாக கரைந்தேன்

கனவில் வாழ கண்களை இழந்தேன் 

நினைவில் பார்த்திட நிஜத்தை மறந்தேன்

பேச்சுக்கள் கேட்காத மேடையில்

பேச்சாளரானேன்

அழுகை எனும் கடலில்

நீந்த முடியாமல் மூழ்கிப் போனேன்

இனி நான் என்ன செய்வது

இந்த முறிந்த காதலில்
முடிவில்லாமல் வாழ தொடங்கினேன்

நான் வாழ்கிறேன்  காதலே ஒரு கவிஞனாக

Kisi Mai Itna Mat....

 Kisi Mai Itna Mat

Doob Jana KI Kasti,

Kinaare Aa Jaye Or

Tum Na Aa Pao..!!

Khud ka Dard

Khud ka Dard, Khud se

Jyada Koi Nahi Samajh

Sakta!!!

Baat Nahi hoti Ab meri Ussey,

Baat Nahi hoti Ab meri

Ussey,

Lekin Yakeen mano Aaj Bhi

Wo mere liye Bahut Khash

Hai...

அவள் எங்கே என

 அவள் எங்கே என 

தினம் தினம் யோசனை 

நடந்தால் நிழலாக வருகிறாள் 

பார்த்தால் திரையாக வருகிறாள் 

இரவில் கனவாக வருகிறாள் 

விழித்தாள் நினைவாக வருகிறாள் 

ஆனால் நிஜத்தில் மட்டும் வருவதில்லை 

ஏனோ ???

காதல் என்பது பொல்லாத தீ தான்

 காதல் என்பது பொல்லாத தீ தான் 

மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான் 

கண்கள் முழுதும் நீ வந்த கனவு 

விடிந்தாலும் முடியாதடி 

உன்னோடு நான் வாழ்ந்த 

நொடிகளே போதும் ஜென்மம் ஈடேருமே 

உன் விரல் தருகின்ற 

வெப்பங்களை நினைத்தாள் 

நெஞ்சில் வலி கூடுமே  

வெண்ணிலவையும் உனக்காக கொண்டு வருவேன்...

 என்னுயிரே...

வெண்ணிலவையும் உனக்காக

கொண்டு வருவேன்...

நீ

என்னருகில் இருந்தால்...

வான் நிலவை போல ஒருநாள்

இல்லாமல் போய்விடுவேன்...

நீ

என்னை பிரிந்திருந்தால்...

உறவாக வேண்டாம்

என் உயிராகவந்துவிடு...

உயிரில் கலந்த

என் உறவே.....

மனித மனம்

 மனித மனம்

வாழ்க்கையில் ஏற்படும்

ஏமாற்றங்களையும்

தோல்விகளையும்

ஏற்றுக்கொள்கிறது

ஆனால்..

காதல் கொண்ட மனமோ

காதலினால் ஏற்படும்

ஏமாற்றங்களையும்

தோல்விகளையும்

ஏற்றுக் கொள்ள மறுத்து

கண்ணீரில் கரைகிறது ...!!

என் இனியவளே நம் காதலை மறந்து விடுங்கள் என்னை மன்னித்து விடுங்கள் என்று சொன்னாய்..!!

 என் இனியவளே

நம் காதலை மறந்து விடுங்கள்

என்னை மன்னித்து விடுங்கள்

என்று சொன்னாய்..!!

நானும் மனமில்லாமல்

சரியென்று சொன்னேன் ...!!

ஆனால் ....

என் இதயக் கோவிலில்

உன் நினைவுகள் மட்டும்

தூங்கா விளக்காக

எனக்கு துணையாக

இருக்கட்டும் விட்டுவிடு ..!!

நான் விழும்போது கைத் தூக்கினாய்...

 நான் விழும்போது

கைத் தூக்கினாய்...

நான் உயரும் போது

நாம் நான் ஆக்கினாய்...

விட்டுச் செல்ல பெண்ணால் மட்டும் முடியுமோ?

திரும்பாமலே...

விரும்பாமலே....

..

காதலை அழிக்க

பெண்ணுக்கு மட்டும்

சிறப்பு விசை ....

ஈ பிடிக்கும் பசை..!

ஆண் மகனுக்கோ

இறப்பு திசை.....

ஒன்றின் பின் ஒன்றாக

அடிக்குப் பின் அடியாக

துடித்து துடித்து

மடிய

ஆண் செய்த பாவமென்னவொ?

இணைந்த பாவத்தில் உயிரோடு திண்ணவோ?

என்னை விரும்பியவள் தான் என் மீது காரணமே இல்லாமல் வெறுப்பு கொண்டு என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டாள் ...!!

 என்னை விரும்பியவள் தான்

என் மீது காரணமே இல்லாமல்

வெறுப்பு கொண்டு

என்னை விட்டு பிரிந்து

சென்றுவிட்டாள் ...!!

ஆனால்....

அவளின் உள்ளமும்

அவளது நினைவுகளும்

என்னிடம் தான் இருக்கு

இதனை யாரிடமும்

என்னால் சொல்ல முடியாது ...!!

என் நிலைமையோ

திருவிழாவில்

கைபிடித்து வந்தவர்களை

பிரிந்து திரு திருவென

முழித்துக்கொண்டு

நிற்கும் சிறுவனை போல்

நான் நிற்கிறேன் ..!!

நமக்குள் காதல் பிறந்தது இடைவெளி மறைந்தது

நமக்குள் காதல் பிறந்தது

இடைவெளி மறைந்தது

வானும் நிலவும் போல்

நம் காதல் வளர்ந்தது ..!!

இடையில்

நமக்குள் பிணக்கு

காதல் கசந்தது

மீண்டும் நமக்குள்

இடைவெளி பிறந்தது

காதல் மறைந்தது ..!!

இதுதான்

காலத்தின் கோலமென்று

காயங்களுடன் மனம்

மௌனமாக பேசியது ...!!

காற்று..

இங்கு குளிர் காற்றையும் ,
வெப்பகாற்றையும்,
மிஞ்சி நிக்கிறது
தனிமையெனும் 
புயல் காற்று ..............!