நான் இறந்து கொண்டே இருக்கிறேன்...

நீ என்னோடு இருந்த போதும் 

உன்னையே நினைத்து 

கொண்டிருந்தேன் 

நீ பிரிந்து சென்ற 

பிறகும் உன்னையே 

நினைத்து கொண்டிருக்கிறேன் 

உயிர் போகவில்லை 

ஆனால் நான் இறந்து 

கொண்டே இருக்கிறேன்...!!!

வாழ்க்கை என்ற என்ன ?

என் கவலைகளை

என் வலி

நினைக்க மறந்ததில்லை..!!

பேசமுடியவில்லை சில உறவுகளோடு

என் பயணம் உன் நினைவோடு...

பொய்யாக நடிக்கவும் தெரியவில்லை..!!

நான் அன்பு வைக்க தகுதி இல்லாதவன்

என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை!!

பிரம்மன் செதுக்கிய சிலையே..!!

போதுமடி கண்மணி..!!

இதற்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு செல்..!!!

ஏந்தன் கல்லறையில் எழுதி வையுங்கள் !!

இறுதியில் அவளும் காதலில் விழுந்தால்

மங்கை என்றும் உனக்காக

அல்லி விழி ராணியே..!!

என் கனவுகள...

மரணம்

கொடுத்துவிட்டார்கள் எனக்கு முதலிடத்தை

ஓவியமாய் என்னுள்..!!

மறைத்து மறைத்து வைக்கிறேன்..!!

"இரட்டை விழிப்பார்வை"

உந்தன் இடையின் வளைவுகள்...

ஆறடி பெட்டியில்

நிராகரிப்பு

உன்னோடு முழுமையாக வாழவேண்டும்

மறுஜென்மங்கள் உண்டு என்பதை

எனக்கு நீ உனக்கு நான்

என் இதயம்..!!

எதுவும் நிலை இல்லை

மரணம் நிரந்தரமானது...

பேராசை...

புன்னகை

வாழ்க்கையின் விரக்தி

கடமைக்கு தான் பேசுகிறார்கள்

கடமைக்கு தான் 

பேசுகிறார்கள் என்று 

தெரிந்த பிறகு 

உரிமையோடு 

பேச முடிவதில்லை 

சில உறவுகளோடு...

Jo Log Apni Zindagi Mein

Jo Log Apni Zindagi Mein

Khud Se Jyada Dusro Ki Fikar

Karte Hain....

Aksar Unhi Ki Fikar Karne

Wala Koi Nahi Hota...

என் வலி

என் மௌனம் திமிர் 

அல்ல எண்ணில் 

மறைந்திருக்கும் 

என் வலி

உன்னோடு பேசாமல் மட்டுமே

உன்னோடு பேசாமல் மட்டுமே 

இருக்கின்றேனே தவிர 

உன்னை ஒரு நிமிடமேனும் 

நினைக்க மறந்ததில்லை...

என் கவலைகளை எல்லாம்

என் கவலைகளை எல்லாம் 

ஒரு மலையின் மீது ஏறி 

தள்ளி விடலாம் என்று 

தோன்றியது வேண்டாம் 

யார் தலையிலாவது 

விழுந்து விடும்..

அவள் என்னை கடந்து செல்லும்

 

அவள் என்னை கடந்து செல்லும் 
போதெல்லாம் வழமையை விட சற்று 
அதிகமாகவே துடிக்கின்றது 
என் இதயம்..!!!

எதுவும் நிலை இல்லை


எதுவும் நிலை 
இல்லை 
என்பதை கற்றுத் 
தரவே 
சிலர் நம் 
வாழ்க்கையில் வந்து 
செல்கின்றனர் 

பேசி பழகிய நேரங்கள் குறைகிறது என்றால்


 பேசி பழகிய நேரங்கள் 
குறைகிறது என்றால் 
நம் அன்பு அவர்களிடத்தில் 
நிராகரிக்க தொடங்கி 
விட்டது என்று அர்த்தம்..!!!

வாழ்வது ஒரு நாளாக


வாழ்வது ஒரு நாளாக 
இருந்தாலும் அதை 
உன்னோடு முழுமையாக 
வாழ வேண்டும் 

நீ எனக்கு இல்லை.....

நீ எனக்கு இல்லை.....

என்று தெரிந்ததிலிருந்து....

நம்பத் தொடங்கிவிட்டேன்;

மறுஜென்மங்கள் 

உண்டு என்பதை.!

அந்த காந்தப்புலத்தை கண்டுபிடித்தவரை


 அந்த காந்தப்புலத்தை
கண்டுபிடித்தவரை
யாரேனும் அறிந்தால் 
கூட்டி வாருங்கள்..
காந்தப்புலத்தையும் மிஞ்சி 
எப்படி இழுக்கிறது என்று கேப்போம் !
என்அவளுடைய  "இரட்டை விழிப்பார்வை"
                                     --- கவிதையின் மழை 

தெரியாமல் பார்த்துவிட்டேன்.!

தெரியாமல் பார்த்துவிட்டேன்.!

விபத்தில் சிக்கிவிட்டது 

என் மனது.!

அத்தனை ஆபத்தா என்ன;?

உந்தன் இடையின் வளைவுகள்... 

எனக்கு நீ.! உனக்கு நான்.!

எனக்கு நீ.!
உனக்கு நான்.!

என்றும் இது கனவினில் 
மட்டும் தான் போல...

உனக்கு நான் என்பது 
கனவாக இருக்கலாம்..!!

என்றும் எனக்கு 
நீ மட்டும் தான்..!!

எந்தன் கல்லறையில் எழுதி வையுங்கள்!


எந்தன் கல்லறையில் 
எழுதி வையுங்கள்!
அவளை காதலித்ததற்கு அந்த காதகி 
தந்த முதல் பரிசு "கண்ணீர்"
இரண்டாம் பரிசு "மரணம்" என்று....!!!

இறுதியில் அவளும் காதலில் விழுந்தால்;


 இறுதியில் அவளும் காதலில் விழுந்தால்;
அவள் காதலிக்கையிலும் நான் 
ஒருதலைக் காதலன் தான்;
அவள் காதலித்தது உண்மைதான்;
அவள் மனதை கொள்ளை 
கொண்ட கள்வன் மட்டும் 
நானில்லை...!!!

எந்தன் மரணத்திலாவது உந்தன் மனம் எனக்காக ஒற்றை நிமிடம் ஏங்கிடுமா!

எந்தன் மரணத்திலாவது 

உந்தன் மனம் 

எனக்காக ஒற்றை நிமிடம் 

ஏங்கிடுமா!

என் கரம் பற்றி கண்ணீர் 

வடித்திடுமா!

உந்தன் மௌனத்தை 

களைத்து விடு!

மரணத்தை கூட 

மனதார என்று 

கொள்வேன் 

மங்கை என்றும் 

உனக்காக!

என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை!!

 என்ன பாவம் செய்ததோ 

தெரியவில்லை!!

அவள் எனக்கில்லை என்பதை 

உணராததால் 

இன்னமும் துடித்து கொண்டே 

இருக்கிறது 

"என் இதயம்"

பிரம்மன் செதுக்கிய சிலையே..!!


பிரம்மன் செதுக்கிய 
சிலையே..!!
நீ என்னை மயக்கிய 
ரதியே..!!
உன்னால் இழந்தேன் 
என்னையே..!!
நீ என்றும் என் 
கவியே..!!

போதுமடி கண்மணி.!

போதுமடி கண்மணி.!

உன்னை எண்ணி 

கனவுலோகத்தில் 

நான் காவியம் 

எழுதியது..!!

இனி நீயும் 

வேண்டாம்...!!!

உன் நினைவுகளும் 

வேண்டாம்...!!!!

இதற்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு செல்.!!

 இதற்கு மட்டும் பதில் 

சொல்லிவிட்டு செல்.!!

உலகத்தி அத்தனை 

பெண்கள் இருந்தும் 

என் உள்ளம் 

உன்னை 

எண்ணி துடிப்பதன் 

காரணம் தான் என்ன..??

"தனிமை"

வேண்டாம் வேண்டாம் 

என்கிறேன் இருந்தும் 

விரும்பி விரும்பி 

என்னை 

காதலிக்கிறது 

"தனிமை"

எந்தன் வரிகளின் வர்ணனையே!❣

 எந்தன் வரிகளின் வர்ணனையே!❣

.
உனக்கான இறுதி துதியை எழுதுகிறேன்...☹
.
முடிந்தால் முதலும் முடிவுமாய் இதை உன் விழிகளில் எடுத்துக் கொள்!😶
.
காலங்கள் கடக்கையிலும் உன்னை எந்தன் கண்ணகியாக என் கண்ணுக்குள் மூடி வைத்தேனே!😒
.
கண்ணகி என்றதற்காக என்னில் தீ மூட்டி என்னையே எரித்தாயே!😕
.
கானல் நீர் கொண்டு என் காதலை அணைத்தாயே!💙
.
அணைக்க நினைத்து கண்ணீரை அளித்துச் சென்றாயே!😭
.
போதும்...
இத்தனை காலமும் சொல்லாத காதலை சொல்லோடு சொல்லிய இந்த ஒருதலைக்காதல் போதும்...🖤
.
மௌனம் அதை கலைத்து எந்தன் காதலை கூறிடும் கனா நான் இன்னும் காணவில்லை...💔
.
கண்டதும் உன் கண் பார்த்து கவி பாடுகிறேன் அந்த நாளிற்காக காத்திருக்கிறேன்...😀
.
கார்மேகக்கூந்தல்!💨
கண்டவரை ஈர்த்திடும் கண்கள்!👁 அதனை மெருகூட்டும் கண்ணாடி!👓
இதில் தடுமாறி விழுந்தவனை நிலைகுலைய செய்யப்பட்ட கன்னக்குழி!😊
.
வரிசையில் வருகின்றன வர்ணனைகள்!🥰
.
இருந்தும் வலிகள் தந்த இந்த வாழ்வின் வர்ணனைகள் இனி வேண்டாம்...😓
.
எதற்கு இந்த நடைபிணவாழ்க்கை?😟
.
நடந்தவை நடந்ததாக இருக்கட்டும்...😞
இனி நிகழ்பவை நான் நினைத்தவையாக அமையட்டும்...😔
என் எதிர்காலம் தனியாக செல்லட்டும்...😟
.
என்றும் எந்தன் வெண்ணிலவு நீ மட்டும் தான்!🌝
இருந்தும் எந்தன் இரவுகள் அமாவாசை ஆகட்டும்...🌚 .

நினைத்தது ஏதும் கிடைக்காமல்

 நினைத்தது ஏதும் 

கிடைக்காமல் 

நகரும்  நிகழ்காலத்தில் 

நடைபிணமாய் வாழ்கிறேன் 

வாழ்க்கையின் விரக்தியின் 

உச்சத்தில்...

எந்தன் மரணத்தின் தேதியை..!!!

எந்தன் மரணத்தின் தேதியை..!!!

மங்கை உன் கைகளில் 

தந்துவிட்டேன்...

மனம் மாறி என்னை 

ஏற்றுக்கொள் இல்லையேல்...

உன் கரம் கொண்டே மாய்த்துவிடு... 

நிதமும் உன் நினைவுகளில் 

நிலைமாறிச்செல்வதற்கு 

மரணம் நிரந்தரமானது...

எவ்வளவுதான் சண்டைகள் மிகவும் நீளமானது என்றாலும்,

 எவ்வளவுதான் சண்டைகள் 

மிகவும் நீளமானது

என்றாலும், 

அதனை சமாதானம் 

செய்வதற்கு,

சிறு புன்னகை மட்டும் 

காதலில் போதுமானதாகும் 

கனவுகளின் காகித ஓடம் நான்...

கனவுகளின் காகித ஓடம் நான்...

உன் நினைவுகள் அடித்துச் 

செல்லும் திசையெல்லாம் 

தடுமாறிச் செல்கிறேன் 

உன்னோடு இணைந்திடும் 

பேராசையில்...

ஆறடி பெட்டியில் அமைதியாய் நான் ஊர்வலம் செல்கையில்...!!


 

ஆறடி பெட்டியில் 

அமைதியாய் நான் ஊர்வலம் 

செல்கையில்...!!

உன் விரல்கள் தீண்டிய மலர்கள் 

என் உடலை தீண்டிடவே...!!

நானும் உயிர் வாழ்கிறேன்

உன் நினைவுகளோடு 

கல்லறையில்...!!

ஆறடி பெட்டியில் அமைதியாய் நான் ஊர்வலம்

 ஆறடி பெட்டியில் 

அமைதியாய் நான் ஊர்வலம் 

செல்கையில்...!!

உன் விரல்கள் தீண்டிய மலர்கள் 

என் உடலை தீண்டிடவே...!!

நானும் உயிர் வாழ்கிறேன்

உன் நினைவுகளோடு 

கல்லறையில்...!!

விடுதலை கிடைத்தது எனக்கு

இறுதியாக 

உன் நினைவுகளில் இருந்து 

விடுதலை கிடைத்தது எனக்கு 


மரணம் என்னை சிறை 

பிடித்து சென்றதால் 

தனிமையின் ஆயுள்கைதி நான்!!!


தனிமையின் ஆயுள்கைதி நான்!!!

என்றாவது 

என்னை விடுதலை செய்ய 

அவள் வருவாள் என்று 

எதிர்பார்ப்போடு 

இதயசிறையினுள் 

காத்திருக்கிறேன் 

இத்தனை காலமும்...!!!