வேண்டாம் வேண்டாம்
என்கிறேன் இருந்தும்
விரும்பி விரும்பி
என்னை
காதலிக்கிறது
"தனிமை"
எந்தன் வரிகளின் வர்ணனையே!❣
.நினைத்தது ஏதும்
கிடைக்காமல்
நகரும் நிகழ்காலத்தில்
நடைபிணமாய் வாழ்கிறேன்
வாழ்க்கையின் விரக்தியின்
உச்சத்தில்...
எந்தன் மரணத்தின் தேதியை..!!!
மங்கை உன் கைகளில்
தந்துவிட்டேன்...
மனம் மாறி என்னை
ஏற்றுக்கொள் இல்லையேல்...
உன் கரம் கொண்டே மாய்த்துவிடு...
நிதமும் உன் நினைவுகளில்
நிலைமாறிச்செல்வதற்கு
மரணம் நிரந்தரமானது...
எவ்வளவுதான் சண்டைகள்
மிகவும் நீளமானது
என்றாலும்,
அதனை சமாதானம்
செய்வதற்கு,
சிறு புன்னகை மட்டும்
காதலில் போதுமானதாகும்
கனவுகளின் காகித ஓடம் நான்...
உன் நினைவுகள் அடித்துச்
செல்லும் திசையெல்லாம்
தடுமாறிச் செல்கிறேன்
உன்னோடு இணைந்திடும்
பேராசையில்...
ஆறடி பெட்டியில்
அமைதியாய் நான் ஊர்வலம்
செல்கையில்...!!
உன் விரல்கள் தீண்டிய மலர்கள்
என் உடலை தீண்டிடவே...!!
நானும் உயிர் வாழ்கிறேன்
உன் நினைவுகளோடு
கல்லறையில்...!!
ஆறடி பெட்டியில்
அமைதியாய் நான் ஊர்வலம்
செல்கையில்...!!
உன் விரல்கள் தீண்டிய மலர்கள்
என் உடலை தீண்டிடவே...!!
நானும் உயிர் வாழ்கிறேன்
உன் நினைவுகளோடு
கல்லறையில்...!!
இறுதியாக
உன் நினைவுகளில் இருந்து
விடுதலை கிடைத்தது எனக்கு
மரணம் என்னை சிறை
பிடித்து சென்றதால்
தனிமையின் ஆயுள்கைதி நான்!!!
என்றாவது
என்னை விடுதலை செய்ய
அவள் வருவாள் என்று
எதிர்பார்ப்போடு
இதயசிறையினுள்
காத்திருக்கிறேன்
இத்தனை காலமும்...!!!