எந்தன் மரணத்தின் தேதியை..!!!
மங்கை உன் கைகளில்
தந்துவிட்டேன்...
மனம் மாறி என்னை
ஏற்றுக்கொள் இல்லையேல்...
உன் கரம் கொண்டே மாய்த்துவிடு...
நிதமும் உன் நினைவுகளில்
நிலைமாறிச்செல்வதற்கு
மரணம் நிரந்தரமானது...
எந்தன் மரணத்தின் தேதியை..!!!
மங்கை உன் கைகளில்
தந்துவிட்டேன்...
மனம் மாறி என்னை
ஏற்றுக்கொள் இல்லையேல்...
உன் கரம் கொண்டே மாய்த்துவிடு...
நிதமும் உன் நினைவுகளில்
நிலைமாறிச்செல்வதற்கு
மரணம் நிரந்தரமானது...
எவ்வளவுதான் சண்டைகள்
மிகவும் நீளமானது
என்றாலும்,
அதனை சமாதானம்
செய்வதற்கு,
சிறு புன்னகை மட்டும்
காதலில் போதுமானதாகும்
கனவுகளின் காகித ஓடம் நான்...
உன் நினைவுகள் அடித்துச்
செல்லும் திசையெல்லாம்
தடுமாறிச் செல்கிறேன்
உன்னோடு இணைந்திடும்
பேராசையில்...
ஆறடி பெட்டியில்
அமைதியாய் நான் ஊர்வலம்
செல்கையில்...!!
உன் விரல்கள் தீண்டிய மலர்கள்
என் உடலை தீண்டிடவே...!!
நானும் உயிர் வாழ்கிறேன்
உன் நினைவுகளோடு
கல்லறையில்...!!
ஆறடி பெட்டியில்
அமைதியாய் நான் ஊர்வலம்
செல்கையில்...!!
உன் விரல்கள் தீண்டிய மலர்கள்
என் உடலை தீண்டிடவே...!!
நானும் உயிர் வாழ்கிறேன்
உன் நினைவுகளோடு
கல்லறையில்...!!
இறுதியாக
உன் நினைவுகளில் இருந்து
விடுதலை கிடைத்தது எனக்கு
மரணம் என்னை சிறை
பிடித்து சென்றதால்
தனிமையின் ஆயுள்கைதி நான்!!!
என்றாவது
என்னை விடுதலை செய்ய
அவள் வருவாள் என்று
எதிர்பார்ப்போடு
இதயசிறையினுள்
காத்திருக்கிறேன்
இத்தனை காலமும்...!!!
உலகின் பொய் கூறும் போட்டியில்
பாலைவனத்தில் நீரோடை கண்டதாய் சொன்னார்கள்
போட்டியில் பங்குபற்றியவர்கள்....
சட்ரென்று நானும் சொன்னேன்
உந்தன் உள்ளத்தில்
எந்தன் நினைவுகள் உள்ளது
என்று...
கொடுத்துவிட்டார்கள் எனக்கு முதலிடத்தை...🏆
மறைத்து மறைத்து
வைக்குறேன்..!!
இருந்தும் மறுபடியும்
முளைத்துக்கொண்டே
இருக்கிறது..!!
மனதினில் புதைந்த
உந்தன் நினைவுகள்...!!!
அல்லி விழி ராணியே..!
நித்தமும் உன் பார்வையில்
நிலை மாறி போகிறேன்..!!
விழியில் பேசும் பாஷையில்
என்னை வீழ்த்திட வைத்தாயே..!!!
காந்தர்வ கண்ணழகி.!
உன் கரம் கோர்த்து வையத்தில்
வலம் வர நீயும் சம்மதம் சொல்வாயோ..!!
எந்தன் கானல் கவிகளை உன்
கண் பார்த்து கூறும் வரம் தருவாயோ..!!
உன் நிழலினை என் நிஜமாக்க
நீற்க்கதியாகி நிற்கிறேன்
உன் பதிலை எதிர்பாத்து..!!!