எந்தன் கல்லறையில் எழுதி வையுங்கள்!


எந்தன் கல்லறையில் 
எழுதி வையுங்கள்!
அவளை காதலித்ததற்கு அந்த காதகி 
தந்த முதல் பரிசு "கண்ணீர்"
இரண்டாம் பரிசு "மரணம்" என்று....!!!

இறுதியில் அவளும் காதலில் விழுந்தால்;


 இறுதியில் அவளும் காதலில் விழுந்தால்;
அவள் காதலிக்கையிலும் நான் 
ஒருதலைக் காதலன் தான்;
அவள் காதலித்தது உண்மைதான்;
அவள் மனதை கொள்ளை 
கொண்ட கள்வன் மட்டும் 
நானில்லை...!!!

எந்தன் மரணத்திலாவது உந்தன் மனம் எனக்காக ஒற்றை நிமிடம் ஏங்கிடுமா!

எந்தன் மரணத்திலாவது 

உந்தன் மனம் 

எனக்காக ஒற்றை நிமிடம் 

ஏங்கிடுமா!

என் கரம் பற்றி கண்ணீர் 

வடித்திடுமா!

உந்தன் மௌனத்தை 

களைத்து விடு!

மரணத்தை கூட 

மனதார என்று 

கொள்வேன் 

மங்கை என்றும் 

உனக்காக!

என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை!!

 என்ன பாவம் செய்ததோ 

தெரியவில்லை!!

அவள் எனக்கில்லை என்பதை 

உணராததால் 

இன்னமும் துடித்து கொண்டே 

இருக்கிறது 

"என் இதயம்"

பிரம்மன் செதுக்கிய சிலையே..!!


பிரம்மன் செதுக்கிய 
சிலையே..!!
நீ என்னை மயக்கிய 
ரதியே..!!
உன்னால் இழந்தேன் 
என்னையே..!!
நீ என்றும் என் 
கவியே..!!

போதுமடி கண்மணி.!

போதுமடி கண்மணி.!

உன்னை எண்ணி 

கனவுலோகத்தில் 

நான் காவியம் 

எழுதியது..!!

இனி நீயும் 

வேண்டாம்...!!!

உன் நினைவுகளும் 

வேண்டாம்...!!!!

இதற்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு செல்.!!

 இதற்கு மட்டும் பதில் 

சொல்லிவிட்டு செல்.!!

உலகத்தி அத்தனை 

பெண்கள் இருந்தும் 

என் உள்ளம் 

உன்னை 

எண்ணி துடிப்பதன் 

காரணம் தான் என்ன..??

"தனிமை"

வேண்டாம் வேண்டாம் 

என்கிறேன் இருந்தும் 

விரும்பி விரும்பி 

என்னை 

காதலிக்கிறது 

"தனிமை"

எந்தன் வரிகளின் வர்ணனையே!❣

 எந்தன் வரிகளின் வர்ணனையே!❣

.
உனக்கான இறுதி துதியை எழுதுகிறேன்...☹
.
முடிந்தால் முதலும் முடிவுமாய் இதை உன் விழிகளில் எடுத்துக் கொள்!😶
.
காலங்கள் கடக்கையிலும் உன்னை எந்தன் கண்ணகியாக என் கண்ணுக்குள் மூடி வைத்தேனே!😒
.
கண்ணகி என்றதற்காக என்னில் தீ மூட்டி என்னையே எரித்தாயே!😕
.
கானல் நீர் கொண்டு என் காதலை அணைத்தாயே!💙
.
அணைக்க நினைத்து கண்ணீரை அளித்துச் சென்றாயே!😭
.
போதும்...
இத்தனை காலமும் சொல்லாத காதலை சொல்லோடு சொல்லிய இந்த ஒருதலைக்காதல் போதும்...🖤
.
மௌனம் அதை கலைத்து எந்தன் காதலை கூறிடும் கனா நான் இன்னும் காணவில்லை...💔
.
கண்டதும் உன் கண் பார்த்து கவி பாடுகிறேன் அந்த நாளிற்காக காத்திருக்கிறேன்...😀
.
கார்மேகக்கூந்தல்!💨
கண்டவரை ஈர்த்திடும் கண்கள்!👁 அதனை மெருகூட்டும் கண்ணாடி!👓
இதில் தடுமாறி விழுந்தவனை நிலைகுலைய செய்யப்பட்ட கன்னக்குழி!😊
.
வரிசையில் வருகின்றன வர்ணனைகள்!🥰
.
இருந்தும் வலிகள் தந்த இந்த வாழ்வின் வர்ணனைகள் இனி வேண்டாம்...😓
.
எதற்கு இந்த நடைபிணவாழ்க்கை?😟
.
நடந்தவை நடந்ததாக இருக்கட்டும்...😞
இனி நிகழ்பவை நான் நினைத்தவையாக அமையட்டும்...😔
என் எதிர்காலம் தனியாக செல்லட்டும்...😟
.
என்றும் எந்தன் வெண்ணிலவு நீ மட்டும் தான்!🌝
இருந்தும் எந்தன் இரவுகள் அமாவாசை ஆகட்டும்...🌚 .

நினைத்தது ஏதும் கிடைக்காமல்

 நினைத்தது ஏதும் 

கிடைக்காமல் 

நகரும்  நிகழ்காலத்தில் 

நடைபிணமாய் வாழ்கிறேன் 

வாழ்க்கையின் விரக்தியின் 

உச்சத்தில்...