வாழ்நாள் முழுவதும்...

வாழ்நாள் முழுவதும் 
பல கூடுகளில் 
வாழ சுதந்திரமாக
பறந்து கொண்டு இருந்த 
பறவை நான்
இன்று பல இதய கூண்டுகள் 
திறந்த விடுதி போல் ஒரு நாள் 
என்னை அழைக்கிறது
நான் உள்ளே சென்று 
என்னிடம் இருக்கும் சத்தமில்லாத 
என் புன்னகை வடிவங்களை 
அள்ளி கொடுத்து விட்டு 
உடனே பறந்துவிட்டேன் 
ஒரு பறவையாக சுதந்திரமாக

புறம் தள்ளி நீ போக......

 புறம் தள்ளி நீ போக

புது உலகம் தந்தாயே

புதிரான வாழ்வில்

கேள்வி குறியாய் ஆனேன்

மௌனத்தின் உச்சியில் நின்றேன்

தனிமையின் சுவரில் ஒட்டிய இருள் ஆனேன்

கிறுக்கி கசக்கி எரிந்த

பிழையான கவிதையானேன்

பூக்கள் இல்லாத செடியில்

காய்ந்து விழுந்த இலையானேன்

உரமாகும் முன் எரிந்த சாம்பலாக கரைந்தேன்

கனவில் வாழ கண்களை இழந்தேன் 

நினைவில் பார்த்திட நிஜத்தை மறந்தேன்

பேச்சுக்கள் கேட்காத மேடையில்

பேச்சாளரானேன்

அழுகை எனும் கடலில்

நீந்த முடியாமல் மூழ்கிப் போனேன்

இனி நான் என்ன செய்வது

இந்த முறிந்த காதலில்
முடிவில்லாமல் வாழ தொடங்கினேன்

நான் வாழ்கிறேன்  காதலே ஒரு கவிஞனாக

Kisi Mai Itna Mat....

 Kisi Mai Itna Mat

Doob Jana KI Kasti,

Kinaare Aa Jaye Or

Tum Na Aa Pao..!!

Khud ka Dard

Khud ka Dard, Khud se

Jyada Koi Nahi Samajh

Sakta!!!

Baat Nahi hoti Ab meri Ussey,

Baat Nahi hoti Ab meri

Ussey,

Lekin Yakeen mano Aaj Bhi

Wo mere liye Bahut Khash

Hai...

அவள் எங்கே என

 அவள் எங்கே என 

தினம் தினம் யோசனை 

நடந்தால் நிழலாக வருகிறாள் 

பார்த்தால் திரையாக வருகிறாள் 

இரவில் கனவாக வருகிறாள் 

விழித்தாள் நினைவாக வருகிறாள் 

ஆனால் நிஜத்தில் மட்டும் வருவதில்லை 

ஏனோ ???

காதல் என்பது பொல்லாத தீ தான்

 காதல் என்பது பொல்லாத தீ தான் 

மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான் 

கண்கள் முழுதும் நீ வந்த கனவு 

விடிந்தாலும் முடியாதடி 

உன்னோடு நான் வாழ்ந்த 

நொடிகளே போதும் ஜென்மம் ஈடேருமே 

உன் விரல் தருகின்ற 

வெப்பங்களை நினைத்தாள் 

நெஞ்சில் வலி கூடுமே  

வெண்ணிலவையும் உனக்காக கொண்டு வருவேன்...

 என்னுயிரே...

வெண்ணிலவையும் உனக்காக

கொண்டு வருவேன்...

நீ

என்னருகில் இருந்தால்...

வான் நிலவை போல ஒருநாள்

இல்லாமல் போய்விடுவேன்...

நீ

என்னை பிரிந்திருந்தால்...

உறவாக வேண்டாம்

என் உயிராகவந்துவிடு...

உயிரில் கலந்த

என் உறவே.....

மனித மனம்

 மனித மனம்

வாழ்க்கையில் ஏற்படும்

ஏமாற்றங்களையும்

தோல்விகளையும்

ஏற்றுக்கொள்கிறது

ஆனால்..

காதல் கொண்ட மனமோ

காதலினால் ஏற்படும்

ஏமாற்றங்களையும்

தோல்விகளையும்

ஏற்றுக் கொள்ள மறுத்து

கண்ணீரில் கரைகிறது ...!!

என் இனியவளே நம் காதலை மறந்து விடுங்கள் என்னை மன்னித்து விடுங்கள் என்று சொன்னாய்..!!

 என் இனியவளே

நம் காதலை மறந்து விடுங்கள்

என்னை மன்னித்து விடுங்கள்

என்று சொன்னாய்..!!

நானும் மனமில்லாமல்

சரியென்று சொன்னேன் ...!!

ஆனால் ....

என் இதயக் கோவிலில்

உன் நினைவுகள் மட்டும்

தூங்கா விளக்காக

எனக்கு துணையாக

இருக்கட்டும் விட்டுவிடு ..!!