அவள் எங்கே என

 அவள் எங்கே என 

தினம் தினம் யோசனை 

நடந்தால் நிழலாக வருகிறாள் 

பார்த்தால் திரையாக வருகிறாள் 

இரவில் கனவாக வருகிறாள் 

விழித்தாள் நினைவாக வருகிறாள் 

ஆனால் நிஜத்தில் மட்டும் வருவதில்லை 

ஏனோ ???

காதல் என்பது பொல்லாத தீ தான்

 காதல் என்பது பொல்லாத தீ தான் 

மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான் 

கண்கள் முழுதும் நீ வந்த கனவு 

விடிந்தாலும் முடியாதடி 

உன்னோடு நான் வாழ்ந்த 

நொடிகளே போதும் ஜென்மம் ஈடேருமே 

உன் விரல் தருகின்ற 

வெப்பங்களை நினைத்தாள் 

நெஞ்சில் வலி கூடுமே  

வெண்ணிலவையும் உனக்காக கொண்டு வருவேன்...

 என்னுயிரே...

வெண்ணிலவையும் உனக்காக

கொண்டு வருவேன்...

நீ

என்னருகில் இருந்தால்...

வான் நிலவை போல ஒருநாள்

இல்லாமல் போய்விடுவேன்...

நீ

என்னை பிரிந்திருந்தால்...

உறவாக வேண்டாம்

என் உயிராகவந்துவிடு...

உயிரில் கலந்த

என் உறவே.....

மனித மனம்

 மனித மனம்

வாழ்க்கையில் ஏற்படும்

ஏமாற்றங்களையும்

தோல்விகளையும்

ஏற்றுக்கொள்கிறது

ஆனால்..

காதல் கொண்ட மனமோ

காதலினால் ஏற்படும்

ஏமாற்றங்களையும்

தோல்விகளையும்

ஏற்றுக் கொள்ள மறுத்து

கண்ணீரில் கரைகிறது ...!!

என் இனியவளே நம் காதலை மறந்து விடுங்கள் என்னை மன்னித்து விடுங்கள் என்று சொன்னாய்..!!

 என் இனியவளே

நம் காதலை மறந்து விடுங்கள்

என்னை மன்னித்து விடுங்கள்

என்று சொன்னாய்..!!

நானும் மனமில்லாமல்

சரியென்று சொன்னேன் ...!!

ஆனால் ....

என் இதயக் கோவிலில்

உன் நினைவுகள் மட்டும்

தூங்கா விளக்காக

எனக்கு துணையாக

இருக்கட்டும் விட்டுவிடு ..!!

நான் விழும்போது கைத் தூக்கினாய்...

 நான் விழும்போது

கைத் தூக்கினாய்...

நான் உயரும் போது

நாம் நான் ஆக்கினாய்...

விட்டுச் செல்ல பெண்ணால் மட்டும் முடியுமோ?

திரும்பாமலே...

விரும்பாமலே....

..

காதலை அழிக்க

பெண்ணுக்கு மட்டும்

சிறப்பு விசை ....

ஈ பிடிக்கும் பசை..!

ஆண் மகனுக்கோ

இறப்பு திசை.....

ஒன்றின் பின் ஒன்றாக

அடிக்குப் பின் அடியாக

துடித்து துடித்து

மடிய

ஆண் செய்த பாவமென்னவொ?

இணைந்த பாவத்தில் உயிரோடு திண்ணவோ?

என்னை விரும்பியவள் தான் என் மீது காரணமே இல்லாமல் வெறுப்பு கொண்டு என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டாள் ...!!

 என்னை விரும்பியவள் தான்

என் மீது காரணமே இல்லாமல்

வெறுப்பு கொண்டு

என்னை விட்டு பிரிந்து

சென்றுவிட்டாள் ...!!

ஆனால்....

அவளின் உள்ளமும்

அவளது நினைவுகளும்

என்னிடம் தான் இருக்கு

இதனை யாரிடமும்

என்னால் சொல்ல முடியாது ...!!

என் நிலைமையோ

திருவிழாவில்

கைபிடித்து வந்தவர்களை

பிரிந்து திரு திருவென

முழித்துக்கொண்டு

நிற்கும் சிறுவனை போல்

நான் நிற்கிறேன் ..!!

நமக்குள் காதல் பிறந்தது இடைவெளி மறைந்தது

நமக்குள் காதல் பிறந்தது

இடைவெளி மறைந்தது

வானும் நிலவும் போல்

நம் காதல் வளர்ந்தது ..!!

இடையில்

நமக்குள் பிணக்கு

காதல் கசந்தது

மீண்டும் நமக்குள்

இடைவெளி பிறந்தது

காதல் மறைந்தது ..!!

இதுதான்

காலத்தின் கோலமென்று

காயங்களுடன் மனம்

மௌனமாக பேசியது ...!!

காற்று..

இங்கு குளிர் காற்றையும் ,
வெப்பகாற்றையும்,
மிஞ்சி நிக்கிறது
தனிமையெனும் 
புயல் காற்று ..............!