கணவன் மனைவி காதல் என்பது,

 

கணவன் மனைவி காதல் என்பது,

கட்டி பிடித்தலிலும்

முத்தம் இடுதலிலும் இல்லை...

தன்னோடு வாழ்பவரின்

வழியையும், உணர்வையும்

புரிந்துகொள்வதில்தான்

இருக்கிறது.....


கண் மூடி கண்ட கனவெல்லாம்.....


 

கண் மூடி கண்ட

கனவெல்லாம்.....

கண் எதிரே காணும்

விழாக்கோலம்....

கனவும் நனவாகும்

வாழ்க்கையில்...

நகரும் அன்பின் தோரணம்

திருமணம்....

எனக்கான சிறிய உலகத்தில்


 

எனக்கான

சிறிய உலகத்தில்

நான் அமைத்து

கொண்ட

மிக பெரிய உறவு

நீ !!!

இந்த கால அதிசயம்.....


 

இந்த கால அதிசயம்.....

இதயங்களை

புதைத்து விட்டு

உயிர் வாழும்

மனிதர்கள்.......

நாம் ஒருவரை நேசிக்கும் போது,


 

நாம் ஒருவரை

நேசிக்கும் போது,

இந்த உலகமே

அழகாய் தெரியும்.....

நம்மை ஒருவர்

நேசிக்கும் போது,

இந்த உலகம்

பேரழகாய் தெரியும்...

வா அன்பே...!!!


 

வா அன்பே...!!!

நடந்ததை எல்லாம் மறந்து விடுவோம்

நமக்குள் அன்பை மீண்டும்

பகிர்ந்து கொள்வோம்

 நானும் நீயும் சேர்ந்து மீண்டும்

பழைய நினைவுகளில் பயணிப்போம்

 மீண்டும் என் வாழ்வில்

வா அன்பே...!!!

இன்று எப்படியும் வந்து

 இன்று எப்படியும் வந்து

விடுவாய் என்ற
நினைப்பில் வளர்பிறையாய்
உனக்காகவே நான் அழகாக
பௌர்ணமியாய்
காத்திருப்பு தந்த ஏமாற்றத்தில்
தேய்பிறையாய்
இனி பலன் இல்லையென
நம்பிக்கை இழந்தேன்
அமாவாசையாய்...

மார்கழிமாத பனியைபோல சிலீரென்று ஒற்றும்...

 மார்கழிமாத பனியைபோல

சிலீரென்று ஒற்றும்...
உன் பார்வை இல்லாமல் என்
இதயம் தவிப்பில் துடிக்கிறது...
உன் புன்னகைக்காக
காத்திருந்து காத்திருந்து...
என் இமைகளும் எனக்கு
சுமையாகி விட்டது...
தென்றலில் வரும் தீயை
போல என்னுள் வந்தாய்...
இன்று என்னிடம்
ஏனடி மௌனம்...
வெறுப்பாக எனக்கு விழியசைவை
வீசிவிட்டு செல்லடி..
நீ என்னைவிட்டு விலகுகிறாயென
உணர்ந்துவிடுவேன்...
நானும் உன்
கண்களில் படாமலே....