உலகின் பொய் கூறும் போட்டியில்
பாலைவனத்தில் நீரோடை கண்டதாய் சொன்னார்கள்
போட்டியில் பங்குபற்றியவர்கள்....
சட்ரென்று நானும் சொன்னேன்
உந்தன் உள்ளத்தில்
எந்தன் நினைவுகள் உள்ளது
என்று...
கொடுத்துவிட்டார்கள் எனக்கு முதலிடத்தை...🏆
உலகின் பொய் கூறும் போட்டியில்
பாலைவனத்தில் நீரோடை கண்டதாய் சொன்னார்கள்
போட்டியில் பங்குபற்றியவர்கள்....
சட்ரென்று நானும் சொன்னேன்
உந்தன் உள்ளத்தில்
எந்தன் நினைவுகள் உள்ளது
என்று...
கொடுத்துவிட்டார்கள் எனக்கு முதலிடத்தை...🏆
மறைத்து மறைத்து
வைக்குறேன்..!!
இருந்தும் மறுபடியும்
முளைத்துக்கொண்டே
இருக்கிறது..!!
மனதினில் புதைந்த
உந்தன் நினைவுகள்...!!!
அல்லி விழி ராணியே..!
நித்தமும் உன் பார்வையில்
நிலை மாறி போகிறேன்..!!
விழியில் பேசும் பாஷையில்
என்னை வீழ்த்திட வைத்தாயே..!!!
காந்தர்வ கண்ணழகி.!
உன் கரம் கோர்த்து வையத்தில்
வலம் வர நீயும் சம்மதம் சொல்வாயோ..!!
எந்தன் கானல் கவிகளை உன்
கண் பார்த்து கூறும் வரம் தருவாயோ..!!
உன் நிழலினை என் நிஜமாக்க
நீற்க்கதியாகி நிற்கிறேன்
உன் பதிலை எதிர்பாத்து..!!!
என் கருவிழியில் அவள் முகம் தெரிய
என்னவளின் பார்வை என் மீது வீச
என் கன்னத்தின் ஓரம் அவள் ஸ்பரிசம் தாக்க
வாழ்நாள் முழுதும்
என்னோடு என்று கூறிய உதட்டில்
என் உதடு மோத
அவள் விரல்கள் என் விரலிடுக்கில் சேர
மூச்சுக்காற்று முகத்தில் வீச
அவளை இறுகப்பற்றி என்னருகே இழுத்த
பொது காற்றில் அருந்த காற்றடியாய்
காணாமல் சென்றது
நான் காலையில்
வைத்த அலாரத்தில் என் கனவுகள்
வார்த்தைகளால்
வர்ணிக்க இயலாத
ஓவியமாய் என்னுள்
புதைந்திருக்கும் அவள்
என்றும் எந்தன் ஆறாவது
காப்பியமே...